Wednesday 10 August 2011

இளையராஜா பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

 
முப்பதாண்டுகளாக தமிழ்ச்சமூகத்தின் இசையுணர்வு இளையராஜா வையாக உருவாகி வந்திருக்கிறது. ஆனால் அவரது பாடல்கள் இன்னமும்கூட தமிழ்நாட்டில் முழுமையாக ரசிக்கப்படவில்லை என்பதை அவற்றை கேட்கும்தோறும் உணர்கிறோம். இளையராஜா படங்களுக்கு அமைத்த பின்னணி இசைக்கோர்ப்புகள் அப்படங்களில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட்டால் தனியான இசை ஆக்கங்களாக முழுமையான அனுபவத்தை அளிக்கக்கூடியவை. அவ்வாரு பார்த்தால் அவரது இசையுலகம் இன்னமும் கண்டுபிடிக்கவே படாத ஒரு புத்துலகம். அதை கேட்டறியும் இசையறிந்த ரசிகர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இளையராஜாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும்.

No comments:

Post a Comment